போரின் போது ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபடவில்லை – மகிந்த சமரசிங்க

போர் இடம்பெற்றபோது ஜகத் ஜயசூரிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்தாவது-

அரசு எப்போதும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்காகச் செயற்படும். அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். அது கட்சியின் பொது கருத்து அல்ல.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையில் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொடுக்கப்பட மாட்டார்கள்.- என்றார்.

இதேவேளை அமைச்சர் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க தயார் என்று நேற்று கூறியிருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்