வவுனியாவில் 15 வயது சிறுவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு

வவுனியா நகரில் பிரபல பாசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரையண்டி அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக பாடசாலை ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளனர். வவுனியா நகருக்கு வர மாலை ஆகியதும் குறித்த சிறுவனின் வீடு பூவரசன்குளம் பகுதியில் உள்ளமையால் அங்கு செல்ல முடியாது என குறித்த சிறுவனின் உறவினர் வீட்டில் தங்குமாறு கூறிவிட்டு ஆசிரியர்கள் சென்று விட்டனர்.

இதன்போது குறித்த சிறுவன் வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்லாது தனது வீட்டிற்குச் செல்ல பேரூந்து தரிப்பிடத்தில் நின்றுள்ளான். இதன்போது அங்கு வந்த நபரொருவர் தான் கொண்டு சென்று விடுவதாக சிறுவனை அழைத்துக் கொண்டு வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்க வைத்துள்ளார். இதன் பின் சாப்பாடு கொடுத்ததாகவும், தான் அயந்து உறங்விட்டதாகவும் தன்னை குறித்த நபர் துஸ்பிரயோகம் செய்ததாகவும் சிறுவன் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளான்.

குறித்த சிறுவனை காணவில்லை என அவனது பெற்றோர் வவுனியா நகருக்கு தேடி வந்த நிலையிலேயே அவர்களைச் சந்தித்த சிறுவன் நடந்த விடயங்களைக் கூறியுள்ளான். இதனையடுத்து குறித்த 34 வயதுடைய நபர் சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்