அனிதா மரணத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட அலை தமிழ்நாடு முழுவதும் எழுந்து வருகிறது.பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை மயிலாப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் மோடி உருவ பொம்மை மற்றும் பா.ஜ.க கொடி ஆகியவை எரிக்கப்பட்டது.போராட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள்,பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.