ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் – பொன்சேகா

இராணுவத்தினரை எந்த வகையிலும் சர்வதேச நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிபதிகள் முன்பாகவும் நிறுத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இராணுவத்தினரை எந்த வகையிலும் சர்வதேச நீதிமன்றங்களின் நீதிபதிகள் விசாரிப்பதற்கு இடமளிப்பதில்லை என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

எனினும் இராணுவத்தினர் தவறிழைத்திருந்தால் அவர்கள் இலங்கை சட்ட விதிமுறைகளுக்கு அமைய தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரத்துபஸ்வல அதேபோல் வெலிக்கடை சிறைச்சாலை மோதல் என்பவற்றுக்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவே கட்டளை பிறப்பித்தாகவும் எனவே அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்