கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்களில் இன்று மின்தடை

மின்சாரப் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கெளதாரிமுனைப் பிரதேசத்தில் இன்று (06) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

மேலும், வவுனியா மாவட்டத்தின் சாந்தசோலைப் பிரதேசத்தில் முற்பகல் 09 மணி முதல் பிற்பகல் 05 மணி வரையும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்தடை தொடர்பாக இன்றைய தினம் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்