திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று வெடிபொருள் வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நால்வரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நான்கு பேரும் இராணுவ வீர்கள் எனவும் அதில் மேஜரொருவரும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.