இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா இராமேஸ்வரத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா இராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மண்டபம் அருகே வாகன சோதனையின் போது மதுரையிலிருந்து அரசு பேரூந்தில் கடத்தி வரப்பட்ட ஐந்துலட்சம் மதிப்பிலான 20கிலோ கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரளா கஞ்சாவை எடுத்து வந்த உசிலம்பட்டியைச்சேர்ந்த அலெக்ஸ்,வெள்ளபாண்டி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களிடம் தமிழ்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தனூஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரத்திலுள்ள பிரபல கடத்தல் முகவரிற்கு விற்பனை செய்யவதற்காக எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்கள்.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்