கேரள டயறீஸ் நூலாசிரியர் அருளினியன் புலிகளின் தண்டனைக்கு உள்ளானவர்

சிறிலங்கா, இந்தியா புலனாய்வாளர்களுடன் இணைந்து கேரள டயறீஸ் என்ற நூலை வெளியிட்ட அருளினியன் பெண் ஒருவரைத் தவறான முறையில் அணுகியதால் தமிழீழ விடுதலைப் புலிகளால் நையப்புடைக்கப்பட்டவர் என்ற விடயம் தற்போது வெளியாகியிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான யாழ்.இந்துக் கல்லூரி மாணவனான அருளினியன் சமாதான காலத்தில் யாழ்.மாவட்ட அரசியல்துறை அலுவலகத்தில் வைத்து நையப்புடைக்கப்பட்டவர் என்று தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பிரபல தளபதிகளையும் அதிகளவான போராளிகளையும் தந்த யாழ்.இந்துக் கல்லூரியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அந்தக் கல்லூரி மாணவனாக இருந்த அருளினியன் பெண் ஒருவருடன் பாலியல் ரீதியான சேட்டையில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல்துறையினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, அவரை கொக்குவில் – பொற்பதியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவரின் செயலுக்காக தண்டனை வழங்கினர்.

அதற்காகவே, அவர் தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தி நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது நூலுக்கு பின்னால் இலங்கை, இந்திய உளவுத்துறைகளின் பங்களிப்பு இருந்திருக்கின்றது எனவும் தெரியவந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்