புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு எப்போது நிறைவேற்றப்படுமெனக் குறிப்பிட முடியாத நிலை உள்ளபோதும், சர்வஜன வாக்கெடுப்பு உள்ளிட்ட விடயங்கள் முறையாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.