சீரற்ற காலநிலை: சிறீலங்காவில் 2,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு, வெள்ளம், கடும் காற்று ஆகிய இடர்களால் பாதிப்புக்குள்ளான 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் மத்திய நிலையம் குறிப்பிட்டது.

கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஏழு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, காலி, இரத்தினபுரி,கேகாலை,வவுனியா,குருணாகலை,பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்வோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு வீடுகள் முற்றாகவும் 360 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

வெள்ளம், மண்சரிவு, கடுமையான காற்று காரணமாக பாதிக்கப்பட்ட 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேரை தற்காலிகமாக பாதுகாப்பான 13 பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் மழை தொடர்வதால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான பிரதேசங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக தற்போது படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறையளிக்கப்பட்டிருந்தது.

தென் மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் நேற்றும் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். மலையத்தில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்ததுள்ளதுன. அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்