வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மல்வத்து பீட மஹா நாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த தமது ஆவணம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் மாறுபட்ட கருத்து வெளியிடப்படுவதாக தெரிவித்து, அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கமொன்றையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.