புதிய அரசமைப்பின் ஊடாக வடக்கு -– கிழக்குத் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து செயற்பட வேண்டும். இதற்காக இரண்டு கட்சிகளும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளையும் குழப்பும் பணிகளில் தீவிரவாதிகள் சிலர் செயற்படுகின்றனர்.
அதை முறியடிக்க வேண்டும். இதேவேளை எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாட்டில் சிறந்த தலைவர் – – என்றார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான மகிந்த அணியினர் புதிய அரச மைப்புப் பணிகளைக் குழப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சிலர் 20ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்புகின்றனர் – -– என்றார்.