கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு…பெண் கைது

கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படவரை நாளை வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் சட்டவிரோத கசிப்பு, கஞ்சா உட்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்