சிறிலங்காவுக்கு வழங்கும் நிதியை 92 வீதத்தால் குறைக்கும் ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்தது செனட்சபை!

சிறிலங்காவுக்கான நிதியை 92வீதத்தால் குறைக்கும் ரொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்தது அமெரிக்க செனட் சபை.

அமெரிக்காவின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான உப குழு கடந்தவாரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பல நாடுகளில் மரபணுச் சோதனைகளின்மூலம், பாரிய கொடூரங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியுள்ளது.

சிறிலங்கா, சிரியா, ஈராக், கம்போடியா, எல்சால்வடோர், குவாடமாலா ஆகிய நாடுகளில், தடயவியல் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இந்த நாடுகளில், இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான ஏனைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும், நீதித்துறை விசாரணைகள், தேவைப்படுகின்றன.

எனவே, சிறிலங்காவுக்கான ஒட்டுமொத்த நிதி வெட்டையும் ஏற்க முடியாது, நிதியளிப்பதற்கு சிறிலங்காவுக்கு நிபந்தனைகளை விதிக்கலாம்” என்றும் அமெரிக்க செனட் உப குழு தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்