நிலக் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 190 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

வடக்கு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 190 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் மூலம் கிடைக்கும் நிதியின் ஊடாக நிலக் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கையில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நிதி ஒதுக்கீடுகளை செய்துவரும் நிலையில், இதுவரையில் 31.3 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்