வவுனியாவில் கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற நபரொருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18.09) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சாம்பல்தோட்டம் பகுதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி நபர் ஒருவர் பயணித்த போது, வீதியில் கடமையிலிருந்த பொலிசார் குறித்த நபரை மறித்து சோதனையிட்ட போது உடமையுடன் மறைத்து வைத்திருந்த நிலையில் கேரளா கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த 34வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் எங்கிருந்து கஞ்சாவினை பெற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினுடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்