8 கோடி பணத்துடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது!

ஸ்ரீலங்காவிலிருந்து டுபாய்க்கு சட்டவிரோதமான முறையில் 8 கோடிக்கு அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 கோடி பணத்துடன் டுபாய் செல்ல முயன்ற ஜோடி

தெமட்டக்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரும் 24 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை டுபாய்க்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இவர்கள் யுஎல்225 என்ற விமானம் மூலம் டுபாய்க்கு குறித்த நாணயத் தாள்களை கடத்திச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 கோடி பணத்துடன் டுபாய் செல்ல முயன்ற ஜோடி

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து யூரோ, டொலர், ஒமான் ரியால் பஹ்ரேன் டினார், சவுதி றியால், ஆகிய நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள நாணயத் தாள்களின் பெறுமதி எட்டு கோடியே 80 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

8 கோடி பணத்துடன் டுபாய் செல்ல முயன்ற ஜோடி

இது தொடர்பான விசாரணைகளை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்