​ஜெயலலிதா மறைவிற்கு பின் அரசியலே விளையாட்டாகி விட்டது: சீமான்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அரசியலே விளையாட்டாகி விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சிவந்தி ஆதித்தனாரின் 82-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவது தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்து பற்றிய கேள்விக்கு, அந்தளவிற்கு சோப்பு போட்டு குளிர்கிறார்கள் என்றும் இந்தளவுக்கு அறிவார்ந்தவர்களையே நாம் அமைச்சர்களாக உருவாக்கியுள்ளோம் எனவும் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்