கூட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்தது தீர்ப்பாயம்

அரச தரப்புச் சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியம் மற்றும் மற்றொரு கண்டகண்ட சாட்சியான நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தின் அடிப்படையிலும், சட்ட வைத்திய அதிகாரி மயூரதனின் சாட்சியத்தின் அடிப்படையிலும் மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பதைத் தீர்ப்பாயம் உறுதி செய்தது.

கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது. யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்