மைத்திரி, சம்பந்தன், விக்னேஸ்வரன் மூவரும் யாழ். இந்துக் கல்லூரியில் ஒரே மேடையில் சந்திப்பர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் எதிர்வரும் எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர்.

தேசிய தமிழ்த் தின விழா இம்முறை யாழ். இந்துக் கல்லூரியில் எதிர்வரும் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் முதல் நாள் நிகழ்வுக்கு மேற்படி அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வர் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வடக்கு முதலமைச்சர் ஆகியோருடன் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்வில் ஒன்றாகக் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் கூறினார்

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்