எம் இனத்தை அழித்தவன் மீண்டும் வடக்கில் – குடைபிடிக்கும் துரோகிகள்

கிளிநொச்சி சென்ற சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் தனது பிள்ளையை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றையதினம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதி சென்ற பசில் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பசில் ராஜபக்ச தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பசில் ராஜபக்ச தலைமையில் இன்று யாழில் பல்வேறு அரசியல் சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் இன்றும்,நாளையும் தங்கியிருக்கும் பசில் உள்ளிட்ட குழுவினர் பொது கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதுடன், பல பொது நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்