‘சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்’ – சொல்வது செல்வம் அடைக்கலநாதன்

இன்றைக்கு நாங்கள் அரசியல் தீர்வு திட்டத்தில் ஏமாறுகின்ற போது,அல்லது ஏமாற்றம் அடைகின்ற போது சர்வதேச நாடுகளிடமும்ஐ.நா. சபையிடமும் நியாயம் கேட்பதற்கான வழிமுமையைபெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என பாராளுமன்றகுழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின்ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பானவிழிர்ப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல் நேற்றுஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,

எங்களிடம் பலம் இல்லை.சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்.அப்படி என்றால், இந்த அரசாங்கத்திற்கு எங்களுடையஇனப்பிரச்சினையை வெல்வதற்கு சில விட்டுக்கொடுப்புக்களைசெய்ய வேண்டும்.

அது சரினாகதி அரசியல் இல்லை என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு நிறைய விட்டுக்கொடுப்புக்களைசெய்துள்ளோம். இந்த அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரித்ததன்காரணத்தினால் தான் இன்றைக்கு எங்களுடைய மாவீரர் துயிலும்இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்றக்கூடியவசதிகள் கிடைத்துள்ளது.

கடந்த அரசு காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்குடும்ப உறவினர்கள் இன்றைக்கு பல மாதங்களாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனைசொல்லுகின்ற வகையில் தொடர்ச்சியாக நியாயமான போராட்டங்களை மேற்கொள்ளுகின்றார்கள்என்று சொன்னால் அது இன்றைய அரசுக்கு செய்கின்ற ஆதரவு.இன்றைக்கு எங்களுடைய மக்களின் காணிகள் பலவற்றைராணுவம் சூறையாடியுள்ளது.

அந்த நிலங்களை மீட்டு தர வேண்டும் என்பதற்காக மக்கள்இராணுவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.எம் மக்களுக்கு அந்த துணிச்சல் வந்ததுஇன்றைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் ரீதியாகதம் இனத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய பல விடயங்களைதாண்ட வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு செய்கின்ற ஆதரவுகள் தான் இன்றைக்கு எங்களுடையபோராட்டங்களை மேலே கொண்டு வர வைத்துள்ளதுஎன்பதனை யாரும் மறந்து விட முடியாது.என அவர் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்