மகிந்தவின் வீட்டிற்குள் கத்தியுடன் சென்ற நபர் விளக்கமறியலில்…!

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் கத்தியுடன் நுழைய முயற்சித்த போது கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் சந்தேக நபருக்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக அங்கொடை மனநோய் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்று அவரை சந்திக்க உள்ளே செல்ல அனுமதிக்குமாறு சந்தேக நபர் கேட்டிருந்ததுடன் அதற்கு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை.

இதனையடுத்து தன்னிடம் இருந்த கத்தியை காட்டி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து பொலிஸாரிடம் கையளித்திருந்தனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்