வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் பொது அமர்வில் பங்கேற்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்!

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் பொது அமர்வு ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் 13 நாட்கள் பயணமாக, நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

இவர் சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக மீளாய்வு செய்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்கு அவர், பொது அமர்வு ஒன்றில் உரையாற்றவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, இவர் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்ளவுள்ளார் .

About காண்டீபன்

மறுமொழி இடவும்