அக்கரப்பத்தனை – ஹூட்வில் தோட்டத்தில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை வழங்கிய தகவலுக்கு அமைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 28 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.