ரஜினி மீது சீமான் கடும் தாக்கு

மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர், கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார்.

ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தற்போது உண்மை பேசிவருவதாகவும், பிரதமர் மோடி அவர்கள் பக்கம் இருப்பதாகவும் சீமான் கூறினார். விவசாயத்தையும் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு சென்றால் மிகப்பெரிய கொடுமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்