இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு வடக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படை கட்டளைத் தளத்தின் வழக்கமான ரோந்து பணியின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவர்களின் மீன்பிடிப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.