தொடர் துப்பாக்கி சூடு– நால்வர் உயிரிழப்பு!

கொஸ்கொட பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர், இத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில், 13 வயது நிரம்பிய சிறுவன் ஒருவனும் மூன்று இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள், எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான பின்னணி இன்னும் வெளிவராத நிலையில், கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்