இனி கசிப்பு வியாபாரிகளால் பாராளுமன்றம் நிறையும் : சரத் அமுனுகம

கசிப்பு வியாபாரிகள் அரசியலில் தீர்மானங்களை எடுக்கும் சக்திகளாக உருவாகியுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவர்களே பாராளுமன்றத்தில் அதிகமாக இருப்பார்கள் எனவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலில் தீர்மானம் எடுக்கும் குழுக்களாக கசிப்பு வியாபாரிகள் இருக்கின்றனர். தொகுதிவாரி தேர்தல் முறையால் இவர்கள் அரசிலில் அழுத்தம் கொடுத்த உள்ளூராட்சி சபைகளையும் மற்றும் பாராளுமன்றத்தையும் ஆக்கிரமிப்பர். என அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்