8 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, இரு படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இந்தநிலையில், அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் 8 மீனவர்களை கைதுசெய்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்