முல்லைத்தீவு களிக்காடு மாவீரர் துயிலுமில்லத்தில் துப்பரவாக்கல் பணி!

அடர்ந்த காட்டு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு மாவீரர் துயிலுமில்லத்தில் போருக்குபின்னர் முதல்தடவையாக இந்த வருடம் மாவீரர் நாளை அனுஸ்டிக்கும் நோக்கோடு துப்பரவாக்கல் பணி இளைஞர்கள் சிலரால் முன்னெடுக்கபட்டுள்ளது.

குறித்த மாவீரர் துயிலுமில்லம் டடி முகாம் என்னும் விடுதலைபுலிகளின் முகாம் இருந்த இடத்தில் அமைந்துள்ளதோடு மிகவும் அடர்ந்த காட்டு பகுதியில் காணபடுகின்றது. இங்கே பல மூத்த மாவீரர்கள் பலரின் கல்லறைகள் காணப்பட்டது. இறுதியுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் முற்றாக அழிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்