தமிழீழ விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
எனினும் இன்று காலையில் அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னின் பிறந்தநாள், தமிழர் தாயக மண்ணிலும், புலம் பெயர் தேசங்களிலும் நாளை கொண்டாடப்படவுள்ளது.
1954ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட ஆரம்பித்த பின்னர், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும். ஆயுதப் போர் தாயக மண்ணில் மௌனிக்கும் வரையில் பகிரங்கமாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அதன் பின்னர் தாயக தேசத்தில், பாதுகாப்புத் தரப்பின் கண்ணில் மண்ணைத் தூவி இரகசியமான இடத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் புலம்பெயர் தேசங்களில் மிகப் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு, தாயக மண்ணிலும், புலம்பெயர் தேசங்களிலும் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி, பட்டாசு கொழுத்தி இந்தக் கொண்டாட்டம் ஆரம்பிக்கும்