மற்றுமொரு இனவாத அமைப்பும் ஆட்டத்தை நிறுத்த தயாரானது

நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசர்களுக்கு பின்னர் நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூடிய விரைவில் புதிய நாடாளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு […]

மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “தமது ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வன்முறை மீண்டும் நிகழாமல் இருப்பதை […]

மாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்!

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் […]

தமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்

கண்டி – ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனிஸ்கல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக் கொண்டாடத்தி்ல் ஈடுபட்ட குழுவினர், சில தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த இளைஞர் ஒருவர் மடுல்கலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாச தோல்வியடைந்துள்ள நிலையில் கூட்டமைப்பின் எதிர்கால நிலைப்பாடு குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் தமிழ் மக்கள் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்பார்த்துதான் சஜித் பிரேமதாசவுக்கு ஆதவளித்தனர் என்றும் மக்களின் அவ்வாறான கோரிக்கைகளை நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் […]

முஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் […]

அடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு!

மக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொறுத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரு அரசாங்கம் தற்போது காணப்படுவதால் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பழைய அரசாங்கமே இன்னும் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். எனினும் இது வரையில் ஐந்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டும். மக்களின் நிலைப்பாட்டை ஏற்று […]

சிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்

சிறுபான்மையினரும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாக வேண்டும் என அழைத்தேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று சிறிலங்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுர –ருவன்வெலிசய சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்ற பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். முற்பகல் 11.56 மணியளவில், உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், சிறிலங்கா அதிபராகப் பதவியேற்கும் உறுதியுரையைப் படிக்க ஆரம்பித்த கோத்தாபய ராஜபக்ச, 11.56 மணியளவில் உறுதியுரையில் கையெழுத்திட்டார். இதையடுத்து, நாட்டு மக்களுக்கு […]

அமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்

இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றாா். தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மே லும் வா் கூறுகையில், கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறா ர்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். […]

கோட்டாவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கிய சிவாஜிலிங்கம்..! தவறினால் பொதுசன வாக்கெடுப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 100 நாட்கள் நி றைவுக்குள் அரசியல் தீா்வு காணப்படவேண்டும். என கூறியுள்ளாா். அதனை எடுக்க தவறினால் சர்வதேச ரீதியாக ஐ.நாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு பிராந்திய பகுதியில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் பகிரங்கமாக கோரு வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் […]

விரைவில் பாராளுமன்ற தேர்தல்!

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, “புதிய பாராளுமன்ற தேர்தல்” ஒன்றுக்கு செல்ல தயார் என இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது பற்றி நாளை நடைபெறும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும். தொடர்ந்து அரசாங்கமாக இழுபறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலுக்கு சென்று தேர்தலை சந்திக்க பெரும்பாலான […]

சிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்!

நடந்து முடிந்த சிறீலங்கா அதிபர் தேர்தலை ஆறு இலட்சத்து நாற்பத்து ஒன்பதுனாயிரத்து நான்கு தமிழ் பேசும் (தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்) மக்கள் முற்றாக புறக்கணித்துள்ளார்கள். இம்முறை நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு இருபத்தாறு இலட்சத்து இருபத்தொன்பதுனாயிரத்து எண்பது (2,629,080) தமிழ் பேசும் மக்கள் தகுதி பெற்றிருந்தார்கள். எனினும் இவர்களில் ஆறு இலட்சத்து நாற்பத்து ஒன்பதுனாயிரத்து நான்கு (649,004) வாக்காளர்கள் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களையும் நிராகரித்து சிறீலங்கா அதிபர் தேர்தலை அடியோடு புறக்கணித்துத் தமக்கு சிறீலங்காவின் ஆட்சி முறையில் […]