டெலோவிலிருந்து முளைக்கின்றது புதிய கட்சி?

இரண்டு வாரத்தில் புதிய தமிழ் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி என்.சிறீகாந்தா அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து வெளியிடுகையில் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை விடுத்திருந்தார். அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்க கட்சி தலைமை முற்பட சிறீகாந்தா தரப்பு தனித்து பயணித்திருந்தது. இந்நிலையில் தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்த கே.சிவாஜிலிங்கத்தை சிறீகாந்தா தரப்பு ஆதரிக்க […]

இன்று கொழும்பு வருகிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமத் குரேஷி இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார். சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், கொழும்பு வரும், இரண்டாவது வெளிநாட்டு உயர்மட்டப் பிரதிநிதி இவர் ஆவார். பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இன்றிரவு 10 மணிக்கு கொழும்பு வரும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், குரேஷி, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். கோத்தாபய ராஜபக்ச அதிபராக பதவியேற்றதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் […]

தேசிய புலனாய்வு பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக (சிஎன்ஐ) நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கஜபா ரெஜிமென்ட்டின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது, உருவாக்கப்பட்ட அதிபர் காவல்படையின் தளபதியாகவும் பணியாற்றினார். இஸ்ரேலுக்கான […]

சம்பந்தனை வெளியேற்றுவதா?ஆராய்கிறது ஜதேக!

தற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பயன்பாட்டுக்கு பெற்றுகொடுக்கப்படுமென அறிய முடிகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது குறித்த அலுவலகத்தை பயன்படுத்தியிருந்த போதும், இதுவரையில் உத்தியோகபூர்மாக கையளிக்கவில்லை எனவும் தெரிவியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த அலுவலகத்தை எதிர்வரும் (04) புதனன்று ஐ.தே.கவுக்கு பெற்றுகொடுப்படவுள்ளதாக அறிய முடிகிறது. […]

கோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இரு நாடுகளின் தலைவர்களுடன் அதிகாரிகள் எவரும் சந்திப்பில் பங்கேற்கவில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரது உதவியாளர் ஒருவர் மாத்திரம் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். இதுகுறித்து தமது கீச்சகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, எங்கள் நாடுகளின் இதயங்களுக்கு முக்கியமான மற்றும் நெருக்கமான பல முக்கிய அம்சங்கள் […]

தலைவரின் படத்தை பதிவிட்ட ஒருவர் கைது!

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூல் மற்றும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் நேற்று (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஹொரணை மத்திய மண்டல தனியார் நிறுவனத்தில் தொழில்புரியம் சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக குறித்த நபர் ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எம்மோடு வாருங்கள் அருந்தவம் விடுக்கும் கோரிக்கை

அண்மையில் தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதிலும் அதுவும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது மிக அவசியமானது என்பதிலும் மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் அந்த ஒற்றுமையை கோருவோரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம். இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் இன்று (29) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும், எம்மிடையே […]

விடுதலைக்காக அரசுடன் பேசி தீர்வு பெற தயார்

அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாகரீகமுடைய மக்களாக வாழ்வதற்காக எங்களை நாங்கள் ஆளவேண்டும். இதற்கான இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த இனமாக நாங்கள் இருக்கின்றோம். இந்நிலையில் இந்த இனத்தின் பிரதிநிதிகளாக நன்றியுடையவர்களாக நாங்கள் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்கின்றோம். […]

மாவீரர் தினத்தில் மலையகத்தில் துண்டுப்பிரசுரம் – இருவர் கைது!

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் கொண்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த இருவர் கைதாகியுள்ளனர். ‘மலையகமும் எழுச்சியும்’, ‘எழுச்சி என்பது மலையகத்திற்கு எட்டா கனியா’ போன்ற வாசகங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை பொகவந்தலாவ பகுதியில் விநியோகம் செய்த இரண்டு சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர். இதில் குறித்த துண்டுபிரசுரத்தினை கணினி ஊடாக அச்சிட்டவரும் உள்ளடங்குவார். இவர்களில் ஒருவர் பொகவந்தலாவ இராணிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் பொகவந்தலாவ டின்சின் […]

முதலாவது கடத்தல்! சிக்கலில் மாட்டியது இலங்கை அரசு

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு தடுத்து வைத்து அச்சுறுத்தப்பட்டார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள சுவிஸ் தூதரகம் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிர்ரே அலையன் எல்ஸசிங்கெர் இந்த வலியுறுத்தலினை முன்வைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை பெண் அதிகாரி ஒருவர் வெள்ளை வானில் […]

கோட்டாபயவின் டெல்லி வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய வைகோ கைது!

சிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்திய தலைநகர் புதுதில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதில் அக்கட்சியின் மற்றொரு எம்பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் தில்லி காவல்துறையால் […]

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ தேச விடுதலைக்காக களமாடி இன்னுயிர்களை ஈந்த மாவீர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். தாயக நேரப்படி சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. பிரதான ஈகச்சுடரை இரு மாவீரர்களின் சகோதரியான நிரஞ்சன் கலைவாணி ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், […]