வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நிகழ்வுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

வழமையான நேரத்தில் இங்கு இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்