மலேசியாவில் நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழினம் காக்க தன்னுயிர் ஈந்த மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தும் வீர வணக்க நிகழ்வு ச.தனு தலைமையில் ஈழத் தமிழர்ளுடன் தமிழக தமிழர்களும் இணைந்து நவம்பர் 27அன்று மாவீரர் நாள் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது . தமிழீழத் தமிழர்களின் அடிமை தளையை உடைத்தெறிந்து ,அவர்கள் மானத்துடனும் ,உரிமைகளோடு வாழவும் ,உலகத் தமிழர்கள் உரிமைகளுடன்வாழவும் , நம் தாய் மண்ணான தமிழீழத்தை மீட்கும் உரிமை போரில் மாவீரர்கள் காவியமானார்கள் .இவ் உலகில் உயிரோடு நாம் வாழும் ஒவ்வொரு மணித் துளியும்,இந்த வளமையும், வாழ்வும் மாவீரர்களுக்கு உரித்தானது என்பதை நினைவில் ஏந்தி, தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் .தமிழீழத்தை தலைவர் காட்டிய வழியில் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி மொழி ஏற்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .

About காண்டீபன்

மறுமொழி இடவும்