மட்டக்களப்பில் மீனவர்களிடம் சிக்கிய பெருமளவான பாம்புகள் -சுனாமி எச்சரிக்கையா?

மட்டக்களப்பு மாவட்டத்தின், நாவலடியில் இன்று காலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகின்றது. அண்மைக் காலமாக, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாது, சிரமத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தினர்.
இந்நிலையில் இன்று மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களுக்கு, இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதோடு, நாட்டில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்றும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால், தற்போது இவ்வாறான அச்சம் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறாக பெருமளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்