19 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகரப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக நேற்று இரவு குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து இரண்டு கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.