ஊர்காவற்துறையில் இந்தியப் பெண்கைது

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பெண் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊர்காவற்துறை, சுருவில் பிரதேசத்தில் வைத்து குறித்த 47 வயதுடைய இந்தியப் பெண்ணை நேற்று (திங்கட்கிழமை) மாலை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்