த.தே.கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவை சரிசெய்யுமாறு சம்பந்தனுக்கு ரணில் உத்தரவு!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிளவை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தனை தொடர்புகொண்ட ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கூட்டமைப்பின் பிளவு நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுப்புகளை செய்து ஏனைய கட்சிகள் வெளியேறாது தக்கவைக்குமாறு ரணில் சம்பந்தனுக்கு ஆலோசனை வழங்கியதை அடுத்து சம்பந்தன் நேரடியாக பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக நம்பிக்கையான தகவல் மூலம் அறிய முடிகிறது.

மாற்று கூட்டணி அமைப்பு பலமாக அமையுமாக இருந்தால் புளொட் த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வந்துவிடுவதாக மாற்று அணி இணைப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களிடம் சித்தார்தன் உறுதியளித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஈழதேசம் இணையம்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்