நாமல் மீது மற்றொரு குற்றச்சாட்டு!

ஸ்ரீலங்கை சுதந்திரக் கட்சியை இணைக்கும் முயற்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவே தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டினை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்வைத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்துவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரும்பினார். கட்சியை ஒன்றிணைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறும் அவர் கட்சி உறுப்பினர்களைப் பணித்திருந்தார்.

“அவரது முயற்சிக்கு ஸ்ரீல.சு.க. உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனினும் நாமல் ராஜபக்ச மற்றும் ப்ரசன்ன ரணதுங்க ஆகியோரின் முட்டுக்கட்டைகளாலேயே இணைப்பு சாத்தியமற்றதாகிப் போனது.” என்று தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்