உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மஹரகம , வெலிகம , பாணந்துறை , அகலவத்த , பதுளை , மஹியங்கனை ஆகிய சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
போதுமான பெண் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளடக்கப்படாமை , கட்சியின் தகுதியுள்ள அதிகாரிகளினால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படாமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.