வடக்கு மாகாணத்தில் பராமரிப் பின்றியுள்ள மக்களின் காணிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு மாகாண சபையின் அடுத்தாண்டு க்கான வரவு –செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில், மக்களின் காணிகள் பல கவனிப்பாரற்று எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றன. அவ்வாறான காணிகளில்தான் டெங்கு, மலேரியா நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகின்றது. எனவே அவற்றை பிரதேச சபைகள் கையகப்படுத்தி துப்புரவு செய்ய வேண்டும்.
மக்கள் காணிகளுக்கு உரிமை கோரி வந்தால் பிரதேச சபைகள் தாம் செலவழித்த பணத்தை அறவிட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக டெங்கு நுளம்புகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் டெங்குக் கட்டுப்பாட்டுக்கு இராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோரை பயன்படுத்து வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தைக் கொண்டு இவ்வாறான வேலைகளை செய்வதன் ஊடாக இனப்படுகொலைகளை மறைக்க முயற்சி செய்கின்றனர்.
வடக்கில் ஏராளமான பெண் தலை மைத்துவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் இராணு வத்தினர் பகலில் வீடுகளுக்கு டெங்குக் கட்டுப்பாடு என்ற பெயரில் வந்து போவதால் குடும்பப் பெண்கள் இரவில் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட தவறின் காரணமாக பலர் தமது கண்களை இழந்து விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பிலும் நீதியான விசாரணை இடம்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்றார்.