நாடு பூராகவும் திடீர் தேடுதல் : 501பேர் கைது

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையில் 14 ஆயிரத்து 706 காவல் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்