கூட்டமைப்பின் 7 வேட்பாளர்கள் விலகுகின்றனர் : மாவைக்கு கடிதம்

சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்களும் தாம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த விலகல் கடிதத்தை தமிழரசு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி நகரசபைக்கான வேட்பு மனு பட்டியல் தயாரிக்கும் போது தமிழரசுக்கட்சி கபட நோக்குடன் பல விடயங்களை மறைத்து தம்மிடம் கையொப்பங்களை பெற்றுக்கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வேட்பு மனுவில் கையொப்பம் பெறப்பட்ட நாளன்று சில முறைக்கேடுகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தாம் இந்த முடிவை மிகுந்த மன வேதனையுடன் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடிதத்தை தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளர் அருந்தவபாலன் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளதுடன், அதில் போட்டியிடும் எழு வேட்பாளர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்