முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சலினால் ஒன்பது பேர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மர்மக் காய்ச்சலினால் இதுவரையில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட 9 பேரும் உயி­ரி­ழந்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கவ­னத்­துக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு மற்­றும் ஆய்­வ­கத்­தின் கவ­னத்­துக்கு அதனை சுகா­தா­ரத் திணைக்­க­ளம் கொண்டு சென்­றது.

இத­னை­ய­டுத்தே முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

இதே­வகை காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட இரு­வர் முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.

இந்த விட­யம் தொடர்­பில் மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ளர் வைத்­தி­யக் கலா­நிதி ஆ.கேதீஸ்­வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இது தொடர்­பில் எமது கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது. எமது மருத்­து­வக் குழு முத­லில் ஆய்­வு­களை மேற்­கொண்­டது. அதே நேரம் கொழும்பு சுகா­தார அமைச்­சுக்­கும் தக­வல் வழங்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டை­யில் கடந்த இரு தினங்­க­ளாக முல்­லைத்­தீ­வில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. காய்ச்­ச­லுக்கு கார­ண­மான வைரஸை அடை­யா­ளம் காணும் முயற்சி வேக­மாக இடம் பெற்று வரு­கின்­றது – என்­றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்