வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகிறது கூட்டமைப்பு!

அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை ஆலையடிவேம்பு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட தமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக சகல சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்ட வகையிலேயே தங்களுடைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் கையளிக்கும் போது ஏற்பட்ட சில குறைபாட்டின் காரணமாகவே தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அம்பாறை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

“இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதி கோரி விரைவில் நாம் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளோம்.” என்றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்