முதல்வராக வந்தால் ஊதியம் பெறாமல் சேவையாற்றுவேன்: மணிவண்ணன்!

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பேரவையின் முதல்வர் வேட்பாளர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார்

“தூய கரங்கள் தூய நகரம்” என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை முதல்வர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னரான செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி பேரவையின் முதல்வர் வேட்பாளரான மணிவண்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்