வடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்

வட மாகாணத்தில் அரசியல்வாதிகள் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர். சிங்கள காவல்துறையினரே அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறை- கரம்பனில் இருந்து, அனலைதீவு, எழுவைதீவுக்கான புதிய படகுச் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள காவல்துறை அதிகாரிகள் மீதே தமிழ் அரசியல்வாதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்