முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பரதேசத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் முக்கியஸ்தர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிபெறுவதற்காகவே இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்